பொள்ளாச்சியில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாட்டம்: குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது. குடும்ப கட்டுப்பாடு முறைகள், இளம் வயது திருமணத்தின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட குடும்ப நல துறையுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் தாய்மார்களுக்கு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) டாக்டர் கார்த்திகேயன், மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் ராஜேஸ்வரி, டாக்டர் ராஜாத்தி, மகப்பேறு உதவியாளர் திருமதி குணவதி, கவுன்சிலர் திருமதி மகேஸ்வரி முதலியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



"ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்ப நலம் - இதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்" என்ற இந்த வருடத்தின் கருப்பொருள் விளக்கி கூறப்பட்டது. குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தும் தாய்மார்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

சட்டப்படி குறைந்தபட்ச திருமண வயது 18 என்பதும், இளம் வயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் உடல் பாதிப்புகளும் விளக்கப்பட்டன. முதல் குழந்தை பிறந்த பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகே இரண்டாவது குழந்தை பெற வேண்டும் என்றும், இடைப்பட்ட காலத்தில் தற்காலிக கருத்தடை முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.



மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மகப்பேறு மருத்துவர்கள் மூலம் தினமும் செய்யப்படுவதாகவும், 22 வயதுக்குப் பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்த பின் அறுவை சிகிச்சை மூலம் குடும்பக் கட்டுப்பாடு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

"நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற கொள்கையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு, இரண்டு குழந்தைகளுடன் தாய் மற்றும் தந்தை அந்தக் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...