கோவை சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு

கோவையில் சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். நிறுவனம் அதிக வட்டி வாக்குறுதி அளித்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு.


கோவை: கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஆவாரம்பாளையம் துரைசாமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவர் பொருளாதார குற்றப் பிரிவில் புகார் மனு அளித்துள்ளார். அதில், கோவை உடையாம்பாளையத்தில் உள்ள ஃபிளவர் வேலன்சியா அடுக்குமாடிக் குடியிருப்பில் செயல்பட்டு வந்த சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் நிறுவனம் மக்களிடம் பெறப்படும் முதலீட்டு தொகைக்கு அதிக வட்டி தருவதாகவும், பல்வேறு திட்டங்கள் வாயிலாக அதிக லாபம் பெறலாம் என்றும் கூறி பலரிடம் முதலீடுகளை பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், நிதி நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குநர்கள் ரிதுவரணன், ஸ்ரீஹரி, பாலன் நாராயணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

இவ்வழக்கின் இறுதி அறிக்கையை முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், மேற்படி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்கப் பெறாதவர்கள் காலம் தாழ்த்தாமல் கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் அமைந்துள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் தங்களிடம் உள்ள தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...