கோவையில் காவல் உதவி ஆய்வாளர் என கூறி பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது

கோவை பேரூரில் காவல் உதவி ஆய்வாளராக நடித்து பெட்டிக்கடையில் ரூ.15,000 பறித்த முன்னாள் போலீஸ் அதிகாரியும், பாஜக நிர்வாகியுமான நபர் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: கோவை பேரூர் படித்துறை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் உள்ள ஒரு பெட்டி கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த பண பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளி தன்னை பேரூர் உதவி ஆய்வாளர் என கூறி, பெட்டிக்கடை உரிமையாளர் வெற்றிவேலிடம் இருந்து ரூ.15,000 பறித்துக் கொண்டதோடு, அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி உக்கடம் காவல் நிலையம் பின்புறம் கொண்டு சென்று விட்டு விட்டு தப்பியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து வெற்றிவேல் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பேரூர் அருகே வசித்த பெருமாள் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், பெருமாள் 1997 பேஜை சேர்ந்த முன்னாள் தமிழக காவல்துறை அதிகாரி என்பது தெரியவந்தது. அவர் 2010-ல் போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போது சீட்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், கைது செய்யப்பட்ட பெருமாள் பாஜக மாநகர் மாவட்ட முன்னாள் ராணுவ பிரிவில் துணைத் தலைவராக இருந்தவர் என்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட பெருமாளிடம் காவல்துறையினர் ஜூலை 10 அன்று மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...