கோவையில் அங்கன்வாடி மையங்கள் அமைக்க சமூக ஆர்வலர்கள் ரூ.20.55 லட்சம் நன்கொடை

கோவை மாநகராட்சியின் 45 மற்றும் 43-வது வார்டுகளில் அங்கன்வாடி மையங்கள் அமைக்க சமூக ஆர்வலர்கள் ரூ.20.55 லட்சம் நன்கொடை வழங்கினர். இந்த திட்டம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (ஜூலை 9) ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS அவர்களிடம், மேற்கு மண்டலத்தின் இரண்டு வார்டுகளில் அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டது.

வார்டு எண் 45-ல் உள்ள சாய்பாபா காலனி, கே.கே.புதூர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கும், வார்டு எண் 43-ல் உள்ள ராதாகிருஷ்ணன் தெரு, ஜவகர்புரம் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை புதுப்பிப்பதற்கும் இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மொத்த மதிப்பீடு ரூ.41.10 லட்சத்தில், ரூ.20.55 லட்சத்திற்கான காசோலையை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.ரமேஷ் வெங்கட்ராமன் அவர்களது சகோதரர் திரு.லட்சுமி நாராயணன் மற்றும் குடும்பத்தினர் வழங்கினர். திரு.ரமேஷ் வெங்கட்ராமன் தற்போது வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

இந்த அங்கன்வாடி மையங்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை கோயம்புத்தூர் WOW EDUCARE நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. குறிப்பாக, புதிதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையம் நவீன Modular Technology முறையில் கட்டப்பட உள்ளது.

இந்த முயற்சி, சமூக ஆர்வலர்களின் சமூக பொறுப்புணர்வையும், அரசு-தனியார் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இது போன்ற முயற்சிகள் நகரத்தின் குழந்தைகள் நலனுக்கும், கல்வி மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...