தேசிய பழு தூக்கும் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்ற கோவை டாஸ்மாக் ஊழியர்

கோவையைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஈஸ்வரன், ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான பழு தூக்கும் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஸ்ட்ராங் மேன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், பழு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வரும் இவர், சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான பழு தூக்கும் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக பங்கேற்றார்.

இப்போட்டியில் தான் பங்கேற்ற மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார் ஈஸ்வரன். மாஸ்டர் பிரிவில் நடந்த பழு தூக்கும் போட்டியில் 455 கிலோ எடையை தூக்கியுள்ளார். பெஞ்ச் பிரஸ் பிரிவில் 105 கிலோ எடையையும், டெட் லிஃப்ட் பிரிவில் 200 கிலோ எடையையும் தூக்கியுள்ளார்.



மூன்று பிரிவுகளிலும் அதிக எடையை தூக்கியதால், ஸ்ட்ராங் மேன் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார் ஈஸ்வரன். தற்போது நண்பர்களின் உதவியுடன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளும் இவர், அரசாங்கமும் தன்னார்வலர்களும் உதவி புரிந்தால் தான் மேலும் உயர முடியும் என்று கூறினார்.

பல்வேறு பணிகள் மற்றும் குடும்ப சூழல் மத்தியிலும் தேசிய அளவில் சாதனை புரிந்த ஈஸ்வரன், தற்போது சர்வதேச அளவிலான போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...