ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அதிநவீன விரிவுரை பிடிப்பு தளம் திறப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அதிநவீன விரிவுரை பிடிப்பு தளம் திறக்கப்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இத்தளம் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை, துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அதிநவீன விரிவுரை பிடிப்பு தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி கல்வெட்டை திறந்து வைத்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களான தொழில் முனைவர், நடிகர், சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ், டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மராத்தானை வென்ற நௌஷீன் பானு சந்த், மற்றும் லவ்லி டிரெயில்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டி.எம். இஷாக் முகமது அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மாதம்பட்டி ரங்கராஜ் அதிநவீன விரிவுரைப் பிடிப்பு தளத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



தொடர்ந்து, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி தளத்தின் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்து நேரலையில் தலைமையுரையாற்றினார். பின்னர், கல்லூரி மாணவர்களின் கேள்விகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதிலளித்தார்.



இந்த அதிநவீன விரிவுரைப் பிடிப்பு தளத்தின் (லெக்சர் கேப்சரிங் ஸ்டுடியோ) முதன்மை நோக்கம் கல்வித் திறன்களை மேம்படுத்துவதும், கல்வி நிறுவனத்தை மேம்படுத்துவதுமாகும். இது ஆசிரியர்களால் வழங்கப்படும் ஆன்லைன் மற்றும் அவுட்ரீச் நிகழ்ச்சிகளின் பதிவுகளை எளிதாக்குவதோடு, கலப்பு முறையில் பாடங்களை வழங்குவதற்கும், கல்லூரிக்கு வருகை தரும் விருந்தினர்கள் மூலம் விளம்பரப் பேச்சுக்களுக்கும் ஆதாரமாக இருக்கும்.

இந்த வசதி முதன்மையாக மாணவர்கள், ஆசிரியர்கள், வெவ்வேறு தொழில் துறை நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு ஆன்லைனில் படிப்புகளை வழங்குவதற்காக தற்கால தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களின் விரிவுரைகளைப் பதிவுசெய்து அவர்களின் கற்பித்தல் கற்றல் செயல்முறையை பின்னூட்டத்துடன் மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் திறனை வளர்ப்பதற்கும் தரத்தை உயர்த்துவதற்கும் உதவும்.

இந்த வசதி ஸ்ரீ ராமகிருஷ்ணா அறக்கட்டளையின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் டாக்டர் என்.ஆர். அலமேலு, இயக்குநர் (கல்வித்துறை), முனைவர் பி.கருப்புசாமி, முதல்வர் (பொறுப்பு) மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...