பொள்ளாச்சியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த மூவர் கைது

பொள்ளாச்சியில் மூன்று வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை ஜூலை 7 அன்று மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்றது.

முதல் சம்பவத்தில், பொள்ளாச்சி நல்லூர் வனப்பகுதி சோதனை சாவடி அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக சேலம் மேச்சேரியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 46) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 37 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டாவது சம்பவத்தில், பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் லாட்டரி டிக்கெட் விற்றதாக பொள்ளாச்சி சின்னம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் (வயது 72) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 24 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் ரூ. 200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மூன்றாவது சம்பவத்தில், பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். இதில், பொள்ளாச்சி பழனியப்பா லே-அவுட்டைச் சேர்ந்த பேச்சுமுத்து (வயது 65) கைது செய்யப்பட்டார்.

இந்த மூன்று சம்பவங்களிலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...