கோவை மாநகராட்சி சிறப்புக் கூட்டம்: அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி

கோவை மாநகராட்சி சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா குறித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பினார். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை கோரிக்கை.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் மா சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் இன்று ஜூலை 8 அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது: "கோவை மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் செயலற்ற மேயராக இருந்தார் என்று பலமுறை சொன்னோம். ஆனால் இப்போது தான் திமுகவுக்கு அவரைப் பற்றி தெரியவந்துள்ளது. மாநகராட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம்."

"மேயர் ஏன் ராஜினாமா செய்துள்ளார் என்பதை அரசு தனிக்குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். அவர் இரண்டு ஆண்டுகளில் என்னென்ன ஊழல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை விசாரிக்க வேண்டும். மேயர் இல்லாத சமயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கும் எனவே ஆணையர் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்," என்று பிரபாகரன் வலியுறுத்தினார்.

மேலும் அவர், "பழைய மேயர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை மறைத்து வைத்திருக்கிறார்கள். வாட்ஸ்அப்பில் குழு அமைத்து டெண்டர் எடுத்த மேயரை எங்காவது பார்த்தது உண்டா? என்ன காரணத்திற்காக ராஜினாமா செய்தார் என்ற முழு விவரத்தை கூட மன்றத்தில் துணை மேயர் வைக்கவில்லை," என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...