கோவை மாநகராட்சி சிறப்புக் கூட்டம்: அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி

கோவை மாநகராட்சி சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா குறித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பினார். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை கோரிக்கை.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் மா சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் இன்று ஜூலை 8 அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது: "கோவை மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் செயலற்ற மேயராக இருந்தார் என்று பலமுறை சொன்னோம். ஆனால் இப்போது தான் திமுகவுக்கு அவரைப் பற்றி தெரியவந்துள்ளது. மாநகராட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம்."

"மேயர் ஏன் ராஜினாமா செய்துள்ளார் என்பதை அரசு தனிக்குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். அவர் இரண்டு ஆண்டுகளில் என்னென்ன ஊழல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை விசாரிக்க வேண்டும். மேயர் இல்லாத சமயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கும் எனவே ஆணையர் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்," என்று பிரபாகரன் வலியுறுத்தினார்.

மேலும் அவர், "பழைய மேயர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை மறைத்து வைத்திருக்கிறார்கள். வாட்ஸ்அப்பில் குழு அமைத்து டெண்டர் எடுத்த மேயரை எங்காவது பார்த்தது உண்டா? என்ன காரணத்திற்காக ராஜினாமா செய்தார் என்ற முழு விவரத்தை கூட மன்றத்தில் துணை மேயர் வைக்கவில்லை," என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...