கோவையில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ராஜவாய்க்கால் சுத்தம் செய்த கவுன்சிலர்

கோவை மாநகராட்சியின் 86வது வார்டில், கவுன்சிலர் அகமது கபீர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ராஜவாய்க்கால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இச்செயல் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சியின் 86வது வார்டு பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து கவுன்சிலர் அகமது கபீர் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உக்கடம் குழந்தை கவுண்டர் வீதி பகுதியில் அமைந்துள்ள ராஜவாய்க்கால், தொடர்ந்து குப்பைகள் அதிகமாக சேர்ந்து சாக்கடை நிரம்பி வழிகிறது. மழைக்காலத்தில் இது பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், வாய்க்காலை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.



அப்போது, அப்பகுதி கவுன்சிலரும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவருமான அகமது கபீர், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து நீர் வழிப்பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இச்செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

"பொதுமக்கள் மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ராஜவாய்க்காலில் குப்பைகளை கொட்டாமல், குப்பை தொட்டியில் கொட்ட வேண்டும்," என்று கவுன்சிலர் அகமது கபீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செயல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, மற்ற பிரதிநிதிகளும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...