கோவை மாநகராட்சியின் சாலையோர வாகன நிறுத்த கட்டண திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி சாலையோரங்களில் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு வர்த்தகத்தை பாதிக்கும் என்று வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நுகர்வோர் அமைப்புகளும் இந்த திட்டத்தை விமர்சித்துள்ளன.


Coimbatore: கோவை மாநகராட்சி சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கும் முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவு பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட கோவை மாநகராட்சியில் தற்போது 100 வார்டுகள் உள்ளன. அவிநாசி சாலை, காந்திபுரம், திருச்சி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாத நிலையில், மாநகராட்சி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை அமைப்பின் தலைவர் ஜெயராமன், மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், "சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வரி செலுத்தும் மக்களுக்கு தேவையான வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் இடங்களில் 'மல்டி லெவல்' வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

கோவை தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம், "கோவை நகரின் சில முக்கிய பகுதிகளில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதனால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கும். இது போன்ற திட்டங்களை அமல்படுத்தும் முன் வர்த்தகர்களை அழைத்து மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

தற்போதுள்ள கட்டண வாகன நிறுத்துமிடங்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், அவற்றை முறைப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தால் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சாலையோரங்களில் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம், வர்த்தகர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...