நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு சேர்க்கை குறைந்துள்ளது - வே.ஈஸ்வரன் குற்றச்சாட்டு

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே.ஈஸ்வரன் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு சேர்க்கை 87% குறைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் நீட் தேர்வு குறித்து அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வே.ஈஸ்வரன் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சிபிஎஸ்இ மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.



"2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் படித்து வந்தனர். ஆனால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 87% அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது," என்று வே.ஈஸ்வரன் தெரிவித்தார்.

நீட் தேர்வு இல்லாவிட்டாலும் கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்த முடியும் என்றும், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கிராமப்புற மாணவர்கள் நீட் கோச்சிங் மையங்களுக்குச் சென்று படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வே.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...