'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்

கோவையைச் சேர்ந்த 'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன், பணமோசடி குற்றச்சாட்டுகளை அடுத்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றம் அவரை ஜூலை 19 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.


கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 'MYV3ADS' நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன், சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 5) சரணடைந்தார்.

'MYV3ADS' என்ற செயலி மூலம் வீடியோ விளம்பரங்கள் பார்த்தால் பணம் கிடைக்கும் என்றும், உறுப்பினர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறி நிறுவனத்தை நடத்தி வந்த சக்தி ஆனந்தன் மீது கடந்த ஜனவரி மாதம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு முதலில் கோவை சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டு, பின்னர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. சக்தி ஆனந்தன் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார், ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதிபதி மலர் வாலண்டீனா முன்னிலையில் சரணடைந்த சக்தி ஆனந்தனை ஜூலை 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சக்தி ஆனந்தன் தரப்பில் ஜாமீன் கோரியும், ஜெயிலில் முதல் வகுப்பு வசதி வேண்டும் என்றும் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'MYV3ADS' நிறுவனம் மீதான பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...