கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சி.ராமசாமி காலமானார்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சி.ராமசாமி (77) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் புகழ்பெற்ற பொருளாதார விஞ்ஞானியாகவும், பல சர்வதேச கட்டுரைகளை வெளியிட்டவராகவும் அறியப்படுகிறார்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சி.ராமசாமி (77) காலமானார். திண்டுக்கல் மாவட்டம் பழனி, வாகரை கிராமத்தைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் 8-வது துணைவேந்தராக, 2002 முதல் 2008-ம் ஆண்டு வரை இரண்டு முறை பொறுப்பு வகித்துள்ளார்.

டாக்டர் சி.ராமசாமி ஒரு புகழ்பெற்ற பொருளாதார விஞ்ஞானியாகவும், பல சர்வதேச கட்டுரைகளை வெளியிட்டவராகவும் அறியப்படுகிறார். உலக சுகாதார நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் பல உயர்மட்ட குழுக்களின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். மேலும், இந்திய பொருளாதார மன்றத்தின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதிலும், தொழில்துறைகளுடன் ஆராய்ச்சி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதிலும், தனியார் வேளாண் கல்லூரிகளை துவக்குவதிலும், சொந்த வருவாயைப் பயன்படுத்தி பல்கலைக்கழகத்தை நடத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் சி.ராமசாமிக்கு சந்திரா என்ற மனைவியும், பிரியா ஆனந்த், சவிதா லெனின் என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், ஜூலை 5 அன்று காலமானார்.

இவரது இறுதிச்சடங்கு கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் ஜூலை 5 அன்று நடைபெற்றது. இவரது மறைவுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...