உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில் இரத்த தானம் முகாம்

வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில், மத்திய பண்ணை வளாகத்தில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்தனர்.


கோவை: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் தேதி அன்று உலக இரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது. பொள்ளாச்சியில் உள்ள வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில், மத்திய பண்ணை வளாகத்தில், ஜூன் 14ம் தேதி அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.



இந்த முகாமை, வாணவராயர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் G.தாமோதரன் மற்றும் முனைவர் N.நவீன், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்தனர்.



இம்முகாமில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இதர மாணவர்களில் சுமார் 50 பேர் மற்றும் கல்லூரியின் 10 பேராசிரியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.



இதன் மூலம் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்வதோடு சமூக நலனில் தங்களுக்கு உள்ள பங்களிப்பையும் பதிவு செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...