கோவையில் நில அளவைத் துறையின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பட்டா மாறுதலில் மோசடி - 2 பேர் கைது

கோவை நில அளவைத் துறை அலுவலகத்தில் முதுநிலை வரைவாளரின் பட்டா மாறுதலுக்கான பயனாளா் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி பட்டா மாறுதலில் மோசடி செய்த இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் தெற்கு வட்ட நகர நில அளவை பதிவேடு துறையில் சார் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் சுரேஷ்குமார் (39). இவா், மாநகர சைபா் கிரைம் போலீஸில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதில், கோவை நில அளவைத் துறை அலுவலகத்தில் முதுநிலை வரைவாளரின் பட்டா மாறுதலுக்கான பயனாளா் ஐடி மற்றும் கடவுச்சொல்லை அனுமதியின்றி பயன்படுத்தி பட்டா மாறுதல் உள்ளிட்ட மோசடிகளில் சிலா் ஈடுபட்டுள்ளனா்.

அவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில், மாநகர சைபா் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், இந்த வழக்கில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் செளரிபாளையத்தைச் சோ்ந்த அருண் பிரதாப் (43), ஆட்சியா் அலுவலகத்தில் கணினிப் பிரிவில் தாற்காலிக ஊழியராகப் பணியாற்றும் பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த மணிகண்டன் (34) ஆகியோரை போலீஸார் நேற்று ஜூன்.27 கைது செய்தனா்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...