ஈஷா ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டுத் தரக் கோரி நிலத்தின் உரிமையாளர் கோவை ஆட்சியரிடம் மனு

பழங்குடியின மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை ஈஷா நிர்வாகம் ஆக்கிரமிட்பு செய்துள்ளதாக நிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அந்த நிலத்தை மீட்டு மீண்டும் அவர்களுக்கே கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் அமெரிக்கா கவுண்டர்(எ) முத்துச்சாமி கவுண்டர். இவருக்கு சொந்தமான 44.3 ஏக்கர் நிலம் 1990களில் அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த நிலத்தை அங்கு வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு கொடுக்கும் படி முத்துச்சாமி கவுண்டர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த நிலத்தை ஈஷா நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை மீட்டு பழங்குடியின மக்களிடமே தரும்படியும் முத்துச்சாமி கவுண்டரின் மகள் விஜயகுமாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஜூன்.24 புகார் மனு அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தங்கள் குடும்பத்தினர் அந்த இடத்தை அங்குள்ள ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு கொடுப்பதற்காக அரசிடம் கொடுத்த நிலையில், தற்போது ஈஷா நிர்வாகம் அதனை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தார்.

அந்த நிலம் பழங்குடியின மக்களுக்கு சென்றடைய வேண்டிய நிலையில் அங்கு ஈஷாவினர் அவர்களது தேவைக்கு பயன்படுத்தி வருவதாக கூறினார். அந்த நிலத்திற்காக அனைத்து மூல பத்திர ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக கூறினார். மேலும் அங்கு கட்டப்படும் மின் மயானம் அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு தேவையே இல்லை எனவும், இவர்கள் புதைக்கும் வழக்கத்தை கொண்டவர்கள் எனக் கூறினார்.

அதே போல் செம்மேடு பகுதியை சேர்ந்த குளத்தேரி பழங்குடி மக்கள் தங்கள் கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தில் ஈஷா நிர்வாகம் மின் வேலி அமைத்துள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டுமென மனு அளித்தனர். அதே சமயம் தங்களுக்கு மின் தகன மேடையும் தேவையில்லை எனவும், தாங்கள் புதைக்கும் வழக்கத்தை கொண்டவர்கள் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...