கோவையில் இல்லந்தோறும் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பீளமேடு பகுதி-2, 28வது வார்டு, ஆவாரம்பாளையம், தெற்கு வீதி, படாளம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., முன்னிலையில் இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



கோவை: தமிழக முதலமைச்சர், திமுக கழகத் தலைவரின் கரத்தை வலுப்படுத்த, கழக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தலைமையில், இல்லந்தோறும் இளைஞர் அணி "உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழ்நாடெங்கும் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், கோவை மாநகர் மாவட்டத்தில் ஏற்கனவே "இல்லந்தோறும் இளைஞர் அணி"உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் இன்று (24-6-2024), திங்கட்கிழமை காலை, பீளமேடு பகுதி-2, 28வது வார்டு, ஆவாரம்பாளையம், தெற்கு வீதி, படாளம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., முன்னிலையில் கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில், கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால் மேற்பார்வையில், பீளமேடு பகுதி-2 செயலாளர் நாகராஜ் தலைமையில் 28வது வட்டக் கழகச் செயலாளர் மோகன்ராஜ் முன்னிலையில், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



இதில் மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லாரா பிரேம் தேவ், க.மணிகண்டன், கோவை அருண்,துரைபிரவீண், இப்னு மசூது, வட்டக் கழகச் செயலாளர் எஸ்.ஜே.தாஸ், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...