எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா – துடியலூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நிர்வாகிகள் கொண்டாட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அரவான் திடல் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, துவக்க தின கல்வெட்டை நிர்வாகிகள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


கோவை: கோவை துடியலூரில் SDPI கட்சியின் 16 ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் துவக்க தின கல்வெட்டையும் திறந்து வைத்தனர். SDPI கட்சியின் 16 ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துடியலூர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொகுதி தலைவர் யாசர் அரபாத் தலைமை ஏற்க, தொகுதி செயலாளர் கமருதீன் முன்னிலை வகுக்க, தொகுதியின் அமைப்புச் செயலாளர் அப்துல் லத்தீப் மற்றும் சக நிர்வாகிகள் கலந்து கொண்டு கொடி ஏற்றினர்.



தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் அரவான் திடல் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, துவக்க தின கல்வெட்டை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பசியற்ற, பயமற்ற இந்தியாவை கட்டமைக்க வேண்டும், மதவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்னும் சூழல் இந்திய தேசத்தில் நிலவ வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...