ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் அதிநவீன 4-ம் தலைமுறை ரோபாடிக் அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம்

டாவின்சி ரோபாடிக் அறுவை சிகிச்சை அரங்கினை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மருத்துவமனை வளாகத்தில் துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் உள்ள முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்றான ஜி.கே.என்.எம். மருத்துவமனையில், அதிநவீன 4-ம் தலைமுறை டாவின்சி ரோபாடிக் அறுவை சிகிச்சை முறையைக் கொண்ட அதிநவீன ஆப்பரேஷன் தியேட்டர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன ரோபோ தொழில்நுட்பம் அறுவை சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். மிகவும் மேம்பட்ட இந்த 4-ம் தலைமுறை டாவின்சி ரோபாடிக் அறுவை சிகிச்சை பிரிவானது புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், சிறுநீரக அறுவை சிகிச்சைகள் மற்றும் மிகக்குறைந்த அளவில் திறக்கப்பட்டு செய்யப்படும் இதய அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட சிக்கலான மற்றும் சவாலான அறுவை சிகிச்சைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.



ரோபாடிக் தொழில்நுட்ப உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சை என்பது குறைந்தபட்ச அளவில் ஊடுருவக்கூடிய மேம்பட்ட அறுவை சிகிச்சைக் கருவியாகும். இது அறுவை சிகிச்சையின் போது சிறந்த அணுகலுக்காக மருத்துவர்களுக்கு அதிக அளவிலான இயக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட காட்சி உருப்பெருக்கத்தை வழங்குகிறது. ரோபாடிக் தொழில்நுட்ப உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சை என்பது வழக்கமாக பின்பற்றப்படும் அறுவை சிகிச்சை நுட்பங்களை விடவும் அதிக துல்லியம், நெகிழ்வுத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டுடன் பல வகையான சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்திட மருத்துவர்களுக்கு வழிவகை செய்கிறது.



நவீன அறுவை சிகிச்சை கருவியான டா வின்சி Xi-னை நிறுவுவதன் மூலம், சமூகத்தின் அனைத்து தரப்பு நோயாளிகளும் சுலபமாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புற்றுநோய் சிகிச்சையினை பெறுவதற்கு சிறந்த தீர்வு ஏற்பட்டுள்ளது.



நன்மைகள்:

அதிக துல்லியம்,அறுவை சிகிச்சை தளத்தில் தொற்று போன்ற குறைவான சிக்கல்கள்,குறைந்த வலி மற்றும் இரத்த இழப்பு, குறுகிய காலம் மருத்துவமனையில் இருத்தல் மற்றும் விரைவாக குணமடைதல், சிறிய, அரிதாக கவனிக்கத்தக்க வடுக்கள், அனுபவம் வாய்ந்த மற்றும் மிகவும் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்களுடன், ஜி.கே.என்.எம். மருத்துவமனை தனது ஒவ்வொரு புதிய முயற்சியின் வாயிலாகவும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவையினை அளிப்பதற்கான வழிகளை மேம்படுத்தி வருகிறது.



இந்த புதிய அறுவை சிகிச்சை அரங்கினை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மருத்துவமனை வளாகத்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் அறங்காவலர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...