கள்ளச்சாராயம் குறித்து கோவை மாநகர் பகுதியில் சோதனை - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம்

கோவை மாநகரை பொறுத்தவரை கள்ளச்சாராயம் புழக்கம் ஏதும் இல்லை. இருப்பினும் கோவை மாநகர் முழுவதும் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்று காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.


கோவை: கோவை பிஆர்எஸ் வளாகத்தில் கோவை மாநகர காவல்துறை கண்காட்சி Expo-2024 காவலர் குடும்பங்களின் விற்பனையங்கள், வங்கிகளின் வீட்டுக் கடன், வங்கிகளின் வீட்டுமனை கடன் கண்காட்சிகள், இலவச யோகா வகுப்புகள் ஆகியவை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,



10-க்கும் மேற்பட்ட தேசிய வங்கிகள் சேவைகள் குறித்து காவலர் குடும்பத்திற்கு விளக்கம் அளித்தனர். மேலும் இடங்கள் வாங்க, விற்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

காவலர்கள் குடும்பத்தினர் 15 ஸ்டால்கள் அமைத்து சுயதொழில் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை இங்கு கண்காட்சியை வைத்து காட்சிப்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் யோகா பயிற்சி வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

கோவை மாநகர் பொறுத்தவரை கள்ளச்சாராயம் புழக்கம் ஏதும் இல்லை. இருப்பினும் கோவை மாநகர் முழுவதும் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து வருகின்றனர். அவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருவதாகவும் தொடர்ந்து விதிமீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

தொடர்ந்து விதிகளை மீறுபவர்கள் மீது தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று கூறினார். மேலும் இரவு நேரங்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வருபவர்களை நுண்ணறிவு மூலமாக ஆராய்ந்து வருவதாகவும் இதுபோல செயலில் ஈடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.

கோவை மாநகரில் போதைப்பொருள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும், போதைப்பொருள் விற்பனை ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

துடியலூரில் போதை பொருள் வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே நைஜீரியா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவரை கைது செய்து இருக்கின்றோம். அது சம்பந்தமாக புலன் விசாரணை நடைபெற்று கொண்டுள்ளது. அதில் தொடர்புடைய ஒரு சில நபர்கள் ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அது சம்பந்தமாக புலன் விசாரணை மேற்கொண்டு சரியான நேரத்தில் அவர்களை நாங்கள் கைது செய்வோம் என்று தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...