கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்த தானம் வழங்கும் முகாம் - திமுக செயலாளர் நா.கார்த்திக் அறிவிப்பு

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வருகிற 22ம் தேதி கோவை வரதராஜபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள சாய் விவாகா மகால் திருமண மண்டபத்தில், தளபதி இரத்ததான இயக்கத்தின் சார்பில், கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்த தானம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக திமுக செயலாளர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.


கோவை: முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வருகிற 22-6-2024, சனிக்கிழமை காலை 8.00 மணியளவில், கோவை வரதராஜபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள சாய் விவாகா மகால் திருமண மண்டபத்தில், தளபதி இரத்ததான இயக்கத்தின் சார்பில், கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்த தானம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில், கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட அனைத்துக் கழக நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், தன்னார்வலர்கள், கழக உடன்பிறப்புக்கள், கழக செயல்வீரர்கள், கழக தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் இன்று (ஜூன்.20) பதிவிட்டுள்ளார்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...