கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிலென்ஸ் கண்ணாடி

கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய பரிசோதனை செய்து அனுப்ப, நுழைவு வாயில் அருகே 2 இடங்களில் குவிலென்ஸ் கண்ணாடி அமைக்கப்பட்டு உள்ளது.


கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளிக்க வருகின்றனர். இதுதவிர ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு புகார் மனுக்களை பெற்று வருகிறார்.

அவ்வாறு புகார் அளிக்க வரும் பொதுமக்களை சோதனை செய்து அனுப்பும் வகையில் போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவுவாயில் அருகே வெடிகுண்டு கண்டறியும் தானியங்கி மெட்டல் டிடெக்டர் கருவி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினமும் வருகின்றன. போலீஸ் உயர் அதிகாரிகள் வாகனங்கள் வெளியே வரும்போது அதே நேரத்தில் பொதுமக்களின் வாகனங்கள் வெளியே வரும்போது வாகனங்களை ஓட்டுபவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாகனம் வருவது தெரியவில்லை.



இதனால் அண்மையில் அங்கு விபத்தை தவிர்க்கவும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய பரிசோதனை செய்து அனுப்பவும் நுழைவு வாயில் அருகே பட்டன் மூலம் இயக்கப்படும் 2 கேட், 2 இடங்களில் குவிலென்ஸ் கண்ணாடியும் அமைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...