கோவை கரும்புக்கடை இஸ்லாமிக் மெட்ரிக் பள்ளியில் பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் ஈடுபட்டனர்.


கோவை: நாடுமுழுவதும் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இயன்றதை பிறருக்கு உதவவேண்டும், என்ற உயரிய நோக்கோடு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் பயனமும் இந்த மாதத்தில் நடைபெற்று, அங்கு பொதுமக்கள் தங்களின் தொழுகை கடமையை நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பக்ரீத் தொழுகை முடிந்த பிறகு பணவசதி படைத்தவர்கள் தாங்கள் வளர்த்திவந்த ஆடு, மாடுகளை பலியிட்டு உற்றார், உறவினர்களுக்கும், ஏழை மக்களுக்கும் வழங்குவார்கள்.

பொருளாதாரத்தில் நடுத்தரமான மக்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் கூட்டாக சேர்ந்து கூட்டு குர்பான் என்ற பெயரில் அனைவருக்கும் உதவுவார்கள்.

இந்த நிலையில், கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிக் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட மக்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...