பல்லடம் அருகே கரைப்புதூரில் சிவப்பு, கருப்பு, மஞ்சள் நிறத்தில் வினியோகிக்கப்பட்ட குடிநீர் – மக்கள் அதிர்ச்சி

அதிகப்படியான டையிங் நிறைந்த பகுதியான கரைபுதூரில், வினியோகிக்கப்பட்ட குடிநீர் கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறத்தில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீரை தூய்மைப்படுத்த அரசு போர்க்கால அடிப்பைடையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் என்ற பகுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் இணைப்பு குழாய்களில் இருந்து விதவிதமான கலரில் தண்ணீர் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கரைப்புதூர், டி.கே.டி போன்ற பகுதிகள் அதிகப்படியான டையிங் நிறைந்த பகுதியாகும். இந்த டையிங்களால் பல நாட்களாகவே இப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் கெட்டுவிட்டது. இந்நிலையில் இன்று பொதுமக்கள் குடிநீர் இணைப்புகளில் தண்ணீர் பெற்றபோது கருப்பு, மஞ்சள், சிவப்பு போன்ற பல்வேறு கலர்களில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.



இந்தசம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், நிலத்தடி நீரை முற்றிலும் பாதுகாக்கவும், கெட்டுப்போன நீரை தூய்மைப்படுத்தவும் அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...