கோவை வட்டாரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம் – மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்

ஆனைமலை வட்டாத்தில் உள்ள 19 ஊராட்சிகளில் நர்சரிகளில் 14,720 மரக்கன்றுகளும், அன்னூர் வட்டாரத்தில் உள்ள 21 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 16276 மரக்கன்றுகள் என மொத்தம் 228 ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில் 1,64,330 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.


கோவை: கோவை, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடிதொடங்கி வைக்கும் விதமாக, தென்னமநல்லூர் ஊராட்சி, மீன்தொட்டி பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு அண்மையில் ஜூன்.12 தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், தென்னமநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுதல் பணிக்கு சென்னை, ஊரக வளர்ச்சி இயக்குநர் 1,27,420 குறியீடு நிர்ணயம் செய்து வரப்பெற்றுள்ளது. அதில் 2024-25 ஆம் நிதியாண்டில் இதுவரை 39,477 மரக்கன்றுகள் பொது திறந்தவெளிப்பகுதி, சாலையோரம் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் நடுதல் பணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.



அவற்றில் உலக சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு 5382 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 வட்டார நர்சரி மற்றும் 12 கூடுதல் நர்சரிகளில் 1,75,560 நாற்றங்கால் உற்பத்தி செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆனைமலை வட்டாத்தில் உள்ள 19 ஊராட்சிகளில் நர்சரிகளில் 14,720 மரக்கன்றுகளும், அன்னூர் வட்டாரத்தில் உள்ள 21 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 16276 மரக்கன்றுகளும், காரமடை வட்டாரத்தில் உள்ள 17 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 13,176 மரக்கன்றுகளும், கிணத்துகடவு வட்டாரத்தில் உள்ள 34 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 22000 மரக்கன்றுகளும், மதுக்கரை வட்டாரத்தில் உள்ள 9 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 6,976 மரக்கன்றுகளும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள 9 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 6,976 மரக்கன்றுகளும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் உள்ள 39 ஊஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 22,204 மரக்கன்றுகளும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் உள்ள 26 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 20,150 மரக்கன்றுகளும், சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் உள்ள 7 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 5426 மரக்கன்றுகளும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ள 20 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 15,500 மரக்கன்றுகளும், சூலூர் வட்டாரத்தில் உள்ள 17 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 13,176 மரக்கன்றுகளும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 7,750 மரக்கன்றுகளும் என மொத்தம் 228 ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில் 1,64,330 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...