ரேஷன் கடைகளில் தொடரும் பாமாயில், பருப்பு தட்டுப்பாடு - தரம் சரியில்லாததால் திருப்பி அனுப்பியதாக கோவை ஆட்சியர் விளக்கம்

டெண்டர் பணிகளால் பருப்பு, பாமாயில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதை தவிர பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்க பெறப்பட்ட பருப்பின் தரம் குறைவாக இருந்த காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. விரைவில் பாமாயில், பருப்பு விநியோகம் சீராகும் என்று கோவை ஆட்சியர் பதிலளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இரண்டாவது மாதமாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,536 நியாய விலைக் கடைகள் உள்ளன. மாதந்தோறும் 11,42,536 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மே மாதம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவியது.

தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் டெண்டர் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது. மே மாதத்துக்கான பருப்பு, பாமாயில் பொருட்களை இம்மாதம் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதே போல் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மே மாதத்துக்கான பொருட்களை ஊழியர்கள் வழங்கினர். இருப்பினும் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு தொடர்வதால் கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகுப்பு பலருக்கு வழங்கப்பட வில்லை.

இந்நிலையில், இந்த மாதத்துக்கான ஒதுக்கீடும் விநியோகிக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோவை நுகர்வோர் அமைப்பினர் கூறும் போது, "பொதுவாக கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு முதல் வாரமும், மூன்றாவது வாரமும் பொருட்கள் குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்படும். பெரும்பாலான ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் சரிவர கோவை மாவட்ட ஆட்சியர் விநியோகிக்கப்படுவதில்லை.

கண்காணிப்பு குழு அதிகாரிகள் சரிவர பணியாற்றுவதில்லை. மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். அதுவும் சரிவர நடப்பதில்லை. மாதந்தோறும் குறித்த நேரத்தில் அனைத்து பொருட்களும் சிறந்த தரத்துடன் திருப்பி விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும் போது, டெண்டர் பணிகளால் பருப்பு, பாமாயில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதை தவிர பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்க பெறப்பட்ட பருப்பின் தரம் குறைவாக இருந்த காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. விரைவில் பாமாயில், பருப்பு விநியோகம் சீராகும் என்று தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...