சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் திருட்டு - காவல்துறை விசாரணை

அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ள வேணுகோபால் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் என்ற மர்ம யார் என்று சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர், திருச்சி ரோட்டில் உள்ள அப்பார்ட்மென்டை சேர்ந்தவர் கார்மெல் வேணுகோபால்(60). இவர் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று ஜூன்.9 அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனைப்பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் கார்மெல் வேணுகோபாலுக்கு போன் செய்து சொன்னார். உடனே கார்மெல் வேணுகோபால், நண்பரான கோவை இருகூரை சேர்ந்த நந்தகோபால்(43) என்பவரிடம் விவரத்தை கூறி வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

அவர் சென்று பார்த்தபோது, வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் அங்கிருந்த ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.பின்னர், இது குறித்து நந்தகோபால் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

பின் அந்த புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பதிவாகியிருந்த 1 கைரேகை பதிவை கைப்பற்றினர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...