வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் இணையவழியில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன்.12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 14 இளம் அறிவியல் பட்டப் படிப்புகளில் உள்ள 5,361 இடங்களுக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 6 இளம் அறிவியல் பட்டப் படிப்புகள், 3 தொழில் முறை பாடப் பிரிவுகளில் உள்ள 371 இடங்களுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இளம் அறிவியல் (வேளாண்மை), இளம் அறிவியல் (தோட்டக்கலை) படிப்புகளில் உள்ள 340 இடங்களுக்குமான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இதற்காக கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் இணையவழியில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன்.12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மூன்று கல்வி நிறுவனங்களிலும் சேருவதற்காக மொத்தம் 26,357 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களில் 16,289 பேர் மாணவிகள். 10,068 பேர் மாணவர்கள். அதேபோல பட்டயப் படிப்புக்கு 2,428 பேர் விண்ணப்பித்திருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...