சோமையம்பாளையத்தில் வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடிய 2 பேர் கைது

சம்சாத் என்பவரின் வீட்டில் புகுந்து செல்போனை திருடிச்சென்ற கவுண்டம்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த ஸ்ரீதர்(19), இடையர்பாளையம் டிவிஎஸ் நகரை சேர்ந்த ஆகாஷ்(23) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சம்சாத்(21) என்பவர் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் சம்சாத் வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டிருந்தார்.

அப்போது நைசாக உள்ளே நுழைந்த 2 பேர் அவரது செல்போனை திருடி சென்றனர்.இதனால் அதிர்ச்சியடைந்த சம்சாத் இது குறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், செல்போனை திருடியது கவுண்டம்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த தனியார் ஊழியர்கள் ஸ்ரீதர்(19), இடையர்பாளையம் டிவிஎஸ் நகரை சேர்ந்த ஆகாஷ்(23) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் இருவரையும் நேற்று ஜூன்.2 கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...