கோவை தனியார் மருத்துவமனை வளாகத்தில் திருட்டில் ஈடுபட்டதாக கூறி ஒருவர் அடித்து கொலை: 8 பேர் கைது

மருத்துவமனை நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட காவலாளிகள், ஊழியர்கள் என எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 11 பேர் மீது கொலை உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் உள்ள KMCH என்ற தனியார் மருத்துவமனையில் இரும்பு பொருட்களை திருட முயன்றதாக கூறி ஒருவர் மருத்துவமனை ஊழியர்களால் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம், தொடர்பான வழக்கில், முதல் கட்ட விசாரணைக்கு பின்னர், மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் என எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.

நேற்று முன்தினம், கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH என்ற தனியார் மருத்துவமனை வளாகத்தில், இரும்பு பொருட்களை திருடன் முயன்றதாக கூறி, காந்திமாநகர் பகுதியை சேர்ந்த ராஜா என்ற நபரை மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் காவலாளிகள் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிகிச்சைக்காக சென்ற தனது கணவரை தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் அடித்து கொலை செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட ராஜா என்பவரின் மனைவி சுகன்யா பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில், சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை துவங்கினர். மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.



இந்த நிலையில், மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், தகவல் பிரிவு மேலாளர் ரமேஷ், செயலாக்கத்துறை அதிகாரி சரவணகுமார், பிஆர்ஓ சசிக்குமார், பிளம்பர் சுரேஷ் , சரவணகுமார், காவலாளி மணிகண்டன், ஸ்டோர் மேனேஜர் சதீஷ்குமார் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 11 பேர் மீது கொலை உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, FIR - யில் முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் உள்ளதாக கூறி உடலை வாங்க மறுத்து கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை முன்பு ராஜாவின் குடும்பத்தார் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடலை வாங்குவதற்கு சம்பந்தம் தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் மருத்துவமனை நிர்வாகத்தினர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...