குண்டடம் அருகே நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி பலி - 3 பேர் மீது வழக்கு

நல்லூரில் முள்புதர்களை அகற்றி தோட்டத்தில் போட்டது தொடர்பான தகராறில் சண்முகம் என்பவரின் குடும்பத்தினர் பழனிசாமி என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அருகே நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட கைகலப்பில் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தந்தை, மகன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குண்டடம் அருகேயுள்ள நல்லூரைச் சேர்ந்தவர் ராமசாமிகவுண்டர். இவரது மகன் பழனிசாமி(58). விவசாயியான இவரின் நிலத்தில் நேற்று, மதியம் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த சண்முகம்(35) என்பவர் முற்புதர்களை அகற்றி போட்டதாக கூறப்படுகிறது.



இதையடுத்து அங்கு வந்த பழனிசாமி, எனது நிலத்தில் ஏன் முற்செடிகளை போடுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதே நேரம் அங்கு வந்த சண்முகத்தின் தந்தை குப்புசாமி, தாய் வள்ளியாத்தாள்(55) ஆகியோரும் பழனிசாமியுடன் தகராறு செய்துள்ளனர். தகராறு கைகலப்பாக மாறவே இரு தரப்புக்‌கும் இடையே தள்ளுமுள்ளு ஏறபட்டு பழனிசாமியை சண்முகம் தரப்பினர் தடியைக் கொண்டு தாக்கியதாக தெரிகிறது. இதில் பழனிசாமி கையில் ரத்த காயம் ஏற்பட்டு பதற்றத்துடன் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

பின்னர் அவரை அவரது மனைவி கைத்தாங்கலாக அழைத்துச் சென்‌று வீட்டில் படுக்க வைத்தார். ஆனால் சிறிது நேரத்தில் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பழனிசாமியின் மனைவி யசோதா குண்டடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சண்முகம், அவரது தந்தை குப்புசாமி, தாயார் வள்ளியம்மாள் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நிலத்தில் முள் போட்ட சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட கைகலப்பினால் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி இறந்த சம்பவம் குண்டடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்‌தியுள்ளது.

Newsletter

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...