கோவை காந்திபுரம் கிராஸ்கட் சிக்னலில் இலவசமாக ஹெல்மெட் வழங்கி வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

காந்திபுரம் கிராஸ்கட் சிக்னலில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதனை கோவை மாநகர போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் பயணிப்போருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இதனிடையே காந்திபுரம் கிராஸ்கட் சிக்னலில் போக்குவரத்து காவல்துறை எஸ்.ஐ கார்த்திக், டிராபிக் வார்டன் பிரபு மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் இன்று (மே.28) வாகன தணிக்கை நடத்தினர்.



அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தைஎடுத்துக்கூறி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...