உடுமலை அருகே சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு - தாராபுரத்தில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்

அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாராபுரம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நேரடியாக 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும், மறைமுகமாக 25,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 110 குடிநீர் திட்டங்கள் மூலம் ஏராளமான பொது மக்கள் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்சமயம் கேரளா அரசு குடிநீர் தேவைக்கு என தடுப்பணை கட்டி வருகின்றது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது.



தடுப்பணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு இயக்கம் சார்பில், விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமையில் விவசாய பாதுகாப்பு இயக்க மாநில துணைச் செயலாளர் வேலு சிவகுமார் முன்னிலையில் தாராபுரம் அண்ணா சிலை அருகே கேரளா அரசை கண்டித்தும், மத்திய மோடி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட விசிகவினர், உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் விவசாய அமைப்புகள் என பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...