சரவணம்பட்டியில் மின்சாரம் தாக்கி இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம்; மூவர் மீது வழக்கு பதிவு

கோவை சரவணம்பட்டியில் இரு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். சம்பவத்தின் காரணமாக மூன்று நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டியில், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான, 'ராமன் விஹார்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 

இங்குள்ள பூங்காவில், ஆந்திர மாநிலம், நெல்லுாரை சேர்ந்த பிரசாந்த் ரெட்டி மகன் ஜெயான் ரெட்டி, 6, நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த பாலசுந்தர் மகள் வியோமா பிரியா, 8, ஆகிய இருவர், கடந்த 23ம் தேதி சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். 

பாலசுந்தர் புகாரில் சரவணம்பட்டி போலீசார், வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் அஜாக்கிரதையாக விபத்தை ஏற்படுத்தி, மரணம் விளைவித்தது தெரிந்து.

பின் குடியிருப்பின் எலக்ட்ரீஷியன் திண்டுக்கலை சேர்ந்த சிவா (29), ஒப்பந்ததாரர்கள் சரவணம்பட்டியை சேர்ந்த முருகன் (45), வடவள்ளியை சேர்ந்த சீனிவாசன் மீது 304 'ஏ' பிரிவின் கீழ் வழக்கு மே.25 பதிந்து விசாரிக்கின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...