மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வால்பாறையில் தீயணைப்புத்துறையினர் ஒத்திகை

மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து வால்பாறை தீயணைப்புத்துறையினர் கூழாங்கள் ஆற்றில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மே மாதம் என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது மழையும் அதிகமாக பெய்து வருகிறது.

இந்த மழையால் வால்பாறையில் உள்ள கூழாங்கள் ஆறு, சின்னகல்லார் நீர்வீழ்ச்சி, கருமலை ஆறு மற்றும் கெஜமுடி ஆறு, ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் தண்ணீரில் இறங்கி குளித்து மகிழும் இடமாக கூழாங்கள் ஆறு உள்ளது.

இந்நிலையில் மழை சமயங்களில் வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து வால்பாறை தீயணைப்புத்துறையினர் கூழாங்கள் ஆற்றில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.



இதில் தண்ணீரில் தத்தளிக்கும் சிறுவனை கயிறு கட்டி தீயணைப்பு படையினர் காப்பற்றி வருவதும், நீரில் மூழ்கிய நிலையில் சிறுவனை காப்பாற்றி வருவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.



பின்பு சுற்றுலா பயணிகளுக்கு மழைக்காலங்களில் ஆற்றில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இதில் தீயணைப்பு துறையினர், சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...