கோவை லங்கா கார்னரில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைப்பு - வாகன ஓட்டிகள் நிம்மதி

லங்கா கார்னரில் மழைநீரை வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கப்பட்டது. இதனால் நேற்று கனமழை பெய்த போதும், மேம்பாலங்களுக்குக் கீழே தண்ணீர் தேங்கவில்லை. இது வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்த நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் பல மணி நேரம் தொடர் கனமழை பெய்தது.

இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சாலைகளின் நிலை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. பொதுவாக மழை வரும்போதெல்லாம் கோவையில் லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலம், அவினாசி சாலை மேம்பாலம் மற்றும் கிக்கானி பள்ளி மேம்பாலத்தின் கீழே மழை நீர் தேங்கும்.

தண்ணீரில் மிதந்தபடி சென்று விடலாம் என்று எண்ணி அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் மழை நீரில் தத்தளித்து பழுதாகி நிற்கும் நிலை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது.

இதற்கு மாநகராட்சி தரப்பில் வெவ்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டும் பயனில்லாமல் இருந்து வந்தது. இதனிடையே மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மழை நீரை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்தார்.

வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. மழைநீர் வடிகால்கள் மேம்படுத்தப்பட்டன. ராட்சத மின் மோட்டார்கள் கொண்டு மழை நீர் அகற்றப்பட்டது. லங்கா கார்னரில் மழைநீரை வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கப்பட்டது.



இதனால் நேற்று மே.22 மாலை நகரில் கனமழை பெய்த போதும், மேம்பாலங்களுக்குக் கீழே தண்ணீர் தேங்கவில்லை.



இது வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...