கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம்

மறுதேர்வில் முழு ஈடுபாட்டுடன் பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் மேற்படிப்பினை தொடர வேண்டும் என்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிராபகரன் அறிவுரை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், நடைபெற்ற மேல்நிலை பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் இன்று (20.05.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது, பிளஸ்-2 பொதுத்தேர்வில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வகுப்புகள் கடந்த 10.05.2024 முதல் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.

மேலும், வருகின்ற 26.06.2024 நடைபெறவுள்ள மறுதேர்வில் முழு ஈடுபாட்டுடன் பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் மேற்படிப்பினை தொடர வேண்டும். கல்வி என்பது மிகவும் இன்றியமையாதவை ஆகும். கல்வி ஒன்று மட்டும் தான் இறுதி வரை நமது கூடவே இருப்பது ஆகும்.

எனவே, கல்விக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தினை மாணவ, மாணவியர்கள் அளித்து வாழ்வில் மென்மேலும் உயர வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 17 மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.மாணவ, மாணவியர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் கல்வி தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.செல்வசுரபி, மாநகராட்சி கல்வி அலுவலர் தாமஸ் சேவியர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...