கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம் - வரும் மே 31ஆம் தேதியுடன் முடிவு

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நடைபெறும் முகாமில் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 20% சலுகைக் கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. இந்த முகாம் மூலம் 200-க்கும் மேற்ட்பட்டவர்கள் பலன்பெற்றுள்ளனர் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: புதுமையான மருத்துவ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் பாரம்பரியத்தின் அடுத்த கட்டமாக கேஎம்சிஹெச் தற்போது அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட ரோபோட்டிக் மூட்டு மாற்று கருவியை அறிமுகம் செய்துள்ளது. மிகத்துல்லியமான அறுவை சிகிச்சைக்கு இந்த அதிநவீன ரோபோ இயந்திரம் உதவுகிறது. மேலும் மென்மையான திசுக்களைப் பாதுகாத்து நோயாளி விரைவில் குணமடையவும் உதவிகரமாக உள்ளது.

செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் இந்த கருவியானது அறுவை சிகிச்சையை சுலபமாகவும், விரைவாகவும் செய்துமுடிக்க உதவுகிறது. மேம்பட்ட துல்லியம், எலும்புகள் மீது மிகவும் கச்சிதமாக இம்பிளாண்டுகள் பொருத்துதல், நோயாளியின் மூட்டு அமைப்புக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குறைவான வலி மற்றும் வீக்கம் ஆகியவை இந்த ரோபோட்டிக் தொழில்நுட்பத்தினால் கிடைக்கும் முக்கிய பலன்களாகும்.

நோயாளி விரைவில் குணமடைவதால் மருத்துவமனையில் தங்கும் காலம் குறைவாகும். இந்த ரோபோட்டிக் கருவியைப் போல் இந்தியாவிலேயே முதன்முறையாக அதிநவீன 3டி சி ஆர்ம் (3D C-Arm) என்ற இமேஜிங் கருவியையும் கேஎம்சிஹெச் அறிமுகம் செய்துள்ளது. எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளின் துல்லியத்தை இது அதிகரித்து சிறந்த பலனைக் கொடுக்கும். எலும்புகள் மறுகட்டமைப்பு முதலான சிக்கலான சிகிச்சைகளையும் மேம்பட்ட திறனுடன் செய்து முடித்திட இது உதவுகிறது.

முப்பரிமாண தொழில்நுட்பம் துணையுடன் மருத்துவர் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது. மேலும் ஸ்குரூக்கள், இம்பிளாண்டுகள் முதலானவற்றை துல்லியமாகப் பொருத்தி சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற உதவியாய் உள்ளது. இந்த அதிநவீன இயந்திரங்கள் அளிக்கும் அனுகூலங்களை நோயாளிகள் எளிதில் பெற்றுப் பலனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கேஎம்சிஹெச் ஒரு ரோபோட்டிக் மூட்டு மாற்று முகாமிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது. 2024 மார்ச் 1 முதல் மே 31-ம் தேதி வரை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நடைபெறும் இம்முகாமில் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 20% சலுகைக் கட்டணத்தில் அளிக்கப்படுகிறது.

இந்த முகாம் மூலம் 200-க்கும் மேற்ட்பட்டவர்களுக்கு ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து பலன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள733 9333 485 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...