உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க திடீர் தடை

பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. நேற்று இரவு பஞ்சலிங்க அருவியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி, ஜல்லிக்கட்டு, முத்தான் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்த நிலையில் இன்று காலையில் வெயில் அடித்த காரணத்தால் காலை 11:00 மணி முதல் மதியம் 2 மணி வரை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்பொழது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தீடீரென தடை விகித்தனர்.



மேலும் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை உடனே அப்புறப்படுத்தினர்.தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...