உடுமலை கோடந்தூர் மலைவாழ் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் மக்கள்..!

சின்னாறு சோதனை சாவடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும் இது குறித்து பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் அமைந்துள்ளது கோடத்தூர் மலைவாழ் கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலை கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் தற்பொழுது பல வீடுகள் இடிந்து சேதம் அடைந்தும் விரிசல் அடைந்தும் காணப்படுகின்றது.

இதனால் மழை வெயில் காலங்களில் மலைவாழ் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தற்பொழுது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் குடிநீருக்கு பொதுமக்கள் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது.

மேலும், அவசர தேவைக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உடுமலை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளதால் கோடந்தூர் மலைவாழ் கிராமத்துக்கு அருகில் உள்ள சின்னாறு சோதனை சாவடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும் இது குறித்து பல ஆண்டுகளாக தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர்களிடமும், மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் செய்யப்படவில்லை என மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். எனவே, தமிழக அரசு கோடந்தூர் மலை கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...