பத்தாம் வகுப்பு தேர்வில் உடுமலை மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் - பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு

ஆர்.கே.ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி மாணவி யுகாஷினி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், திருப்பூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.கே.ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பயிலும் யுகாஷினி என்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், திருப்பூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.



இந்த நிலையில், இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவி யுகாசினிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



பின்னர் பள்ளியின், தாளாளரும் நல்லாசிரியர் விருது பெற்றவருமான ஆர்.கே. ராமசாமி மாணவிக்கு இனிப்புகள் வழங்கி,



இதே போல பன்னிரண்டாம் வகுப்பு தேர்விலும் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். என் வெற்றிக்கு காரணம் தாய் மற்றும் ஆசிரியர்கள் ஊக்குவிப்பு தான். பள்ளியில் அதிகமான மாதிரி தேர்வுகள் வைத்து ஆசிரியர்கள் என்னை உற்சாகம் ஊட்டினர். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தாய், பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

பள்ளியின் தாளாளர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, தற்பொழுது மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற யுகாஷனி ஆர்.கே.ஆர். குரு வித்யா பள்ளியில் எல்.கே.ஜி முதல் படித்து வருகிறார். தற்சமயம் அயராது படித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் இந்த வெற்றிக்கு காரணமான பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்று வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் பள்ளியின் செயலர் கார்த்திக் குமார், முதல்வர்கள் மாலா மற்றும் மஞ்சுளா தேவி, செல்வகுமார், பெற்றோர், ஆசிரியர், கழக நிர்வாகிகள் மற்றும் உடுமலை நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பாரட்டி வாழ்த்து தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவி நேற்று வெளியூரில் இருந்த காரணத்தால் இன்று பள்ளிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...