பொள்ளாச்சி அருகே தாத்தூர் பகுதியில் கஞ்சா கடத்தி வந்த தந்தையும் மகனும் கைது - இருசக்கர வாகனம் பறிமுதல்

பீஹார் மாநிலத்தில் இருந்து 8 கிலோ 400கிராம் கஞ்சா மற்றும் 3 கிலோ 100கிராம் போதை சாக்லேட்டை ஆகியவற்றை வாங்கிவந்து கேரளா மாநிலம் கஞ்சிகோடு பகுதிக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


கோவை: பொள்ளாச்சி அடுத்த தாத்தூர் பகுதியில் நேற்று நள்ளிரவு ஆனைமலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு உரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தியதில் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட் இருப்பது தெரியவந்தது.



இருவரையும் கைது செய்த ஆனைமலை போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் பீஹார் மாநிலத்தில் இருந்து 8 கிலோ 400கிராம் கஞ்சா மற்றும் 3 கிலோ 100கிராம் போதை சாக்லேட்டை உள்ளிட்டவை கேரளா மாநிலம் கஞ்சிகோடு பகுதிக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட தந்தை முகம்மது சஹாப்தின் மற்றும் அவரது மகன் ஆரிப் ராஜா ஆகிய இருவர் மீதும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை ஆனைமலை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். முகம்மது சஹாப்தின் மீது கோவை கா.கா., சாவடி காவல்நிலையதில் 2007ஆம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...