கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு..!

கோவை IOGKO & KENKO- MARTIAL ARTS ACADEMY யில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் மும்பையில் நடைபெற்ற UGKF ALL INDIA GOJURYU karate championshipல் 18 பதக்கங்கள் வென்று கோவைக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளனர்.


Coimbatore: கோவை நகரில் IOGKO & KENKO- MARTIAL ARTS ACADEMY யில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் கராத்தே தகுதி பெற்று மும்பையில் நடைபெற்ற UGKF ALL INDIA GOJURYU karate championship போட்டியில் கலந்து கொண்டு, ஐந்து தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் உள்பட மொத்தம் 18 பதக்கங்கள் வென்று கோவைக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.




பயிற்சியாளர் பிரமோஸ் மற்றும் விஜயனின் தலைமையில் இவர்கள் அதனை சாதித்துள்ளனர். போட்டி முடிந்து நேற்று இரவு கோவை திரும்பிய போது, ரயில் நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.




மேலும் அடுத்த மாதம் புனே நகரில் நடைபெற உள்ள AGKF ASIAN GOJU RYU CHAMPIONSHIP ஆசிய கோ ஜூரியோ கராத்தேப்போட்டிக்கு இந்த வீரர்கள் தேர்வாகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...