தாராபுரம் அருகே குருப்பன் நாயக்கன்பாளையத்தில் இயேசு மீட்பர் ஆலயத்தில் நன்றி வழிபாட்டு விழா நிகழ்ச்சி

குருப்பன் நாயக்கன்பாளையம் கிராமத்தில், தஞ்சாவூர் திருமண்டலம் திருச்சிராப்பள்ளி தென்னிந்திய திருச்சபையின் சார்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சின்னபுத்தூர் சேகரம் இயேசு மீட்பர் ஆலயத்தில் நன்றி வழிபாட்டு விழா நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், சின்னபுத்துர் பஞ்சாயத்துக்குட்பட்ட குருப்பன் நாயக்கன்பாளையம் கிராமத்தில், தஞ்சாவூர் திருமண்டலம் திருச்சிராப்பள்ளி தென்னிந்திய திருச்சபையின் சார்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சின்னபுத்தூர் சேகரம் இயேசு மீட்பர் ஆலயத்தில் நன்றி வழிபாட்டு விழா நிகழ்ச்சி, மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில், வெகு விமர்சியாக நடைபெற்றன.



இந்த நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மறை மாவட்ட தலைவர் பால்ரத்தினம் இறை செய்தி வாசித்தனர். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் டாக்டர் கே. வி.சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு சேகரத் தலைவர் ஜோசப் ரவிச்சந்திரன் வரவேற்பு அளித்து தொடங்கி வைத்தனர்.

இதில் சின்னபுத்தூர், நாரணாபுரம், குருப்பன் நாயக்கன்பாளையம், பஞ்சப்பட்டி, பெரியபுத்தூர், செட்டிபாளையம், பொன்னாபுரம், அம்மாபட்டி ஆகிய சேகரம் பகுதியை சேர்ந்த கிராமங்களில் சுமார் 500க்கு மேற்பட்டோர் திரளாக நன்றி வழிபாட்டு விழாவில் சிறப்பித்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சேகரச் செயலாளர் ஜான்சன்,சேகர பொருளாளர் ஜாய் மெர்சி, ரெவரென்ட் சுமதி ஸ்டெல்லா, ரெவரென்ட் பால் மாணிக்கம், ரெவெரென்ட் ரவிச்சந்திரன் மற்றும் சபை நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...