காங்கேயம் அருகே மாடு திருடனை சிசிடிவி வீடியோவை வைத்து பிடித்து சிறையில் அடைத்த காவல்துறையினர்

கல்லாங்காடு பகுதியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள ஒரு சிந்து மாடு மற்றும் ஒரு கன்றுக்குட்டியை திருடிச்சென்ற கரூர் மாவட்டம் வைகை நல்லூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வீரணம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள ஒரு சிந்து மாடு மற்றும் ஒரு கன்றுக்குட்டி ஆகியவற்றை கடந்த மாதம் ஏப்ரல் 26ஆம் தேதி காணவில்லை என மாட்டின் உரிமையாளர் அருண் பிரசாத் (27) காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரை தொடர்ந்து போலிசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாடுகளை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் தொடர்ச்சியாக மாடு கட்டிவைக்கப்பட்டிருந்த பகுதிகளிலும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர், அதில் பதிவான வாகனம் குறித்தும் விசாரணை செய்தனர்.



இந்நிலையில் இரண்டு மாடுகளையும் திருடி சென்ற திருடனை காங்கேயம் போலிசார் தேடி பிடித்துள்ளனர். இதனை அடுத்து போலிசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட திருடன் பெயர் சந்தோஷ்குமார் வயது 32 என்பதும், கரூர் மாவட்டம் வைகை நல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது‌. இதனை அடுத்து காங்கேயம் போலிசார் சந்தோஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...