பொள்ளாச்சியில் திமுக சார்பில் மே தின ஊர்வலம் - ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உழைப்பாளர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக சார்பில் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கோவை சாலை, புதிய திட்ட சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தேர்நிலையம் பகுதியில் நிறைவடைந்தது.



பின்னர் உழைப்பாளர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக சார்பில் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸ்வர சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...