ரத்தினபுரி அருகே கல்லூரி மாணவரை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு - 2 மர்ம நபர்களை தேடும் போலீசார்

ரத்தினபுரி ரூட்ஸ் பாலத்தின் அடியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கல்லூரி மாணவரை மிரட்டி செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்ற இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கணபதி பாலன் நகரை சேர்ந்தவர் நந்தகுமார்(18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர், நேற்று (ஏப்ரல்.29) தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக ரத்தினபுரி ரூட்ஸ் பாலத்தின் அடியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 2 பேர் அவரிடம் பணம், செல்போன் தருமாறு மிரட்டி உள்ளனர்.

அவர் கொடுக்க மறுத்ததால் அவரிடம் இருந்த செல்போன் மற்றும்ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து நந்தகுமார் அளித்த புகாரின்பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரிடம் செல்போன், பணம் பறித்துச்சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...