உலகம் முழுவதும் போதைப்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது - பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

விலைவாசி ஏற்றம், மின் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் மௌன புரட்சியாக பாராளுமன்ற தேர்தல் முடிவில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்றார்.


Coimbatore:தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் வழங்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார். இதனையடுத்து பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த 525 வாக்குறுதிகளில் முறையாக எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். லஞ்ச லாவண்யம் பெருத்து விட்டது. ஜல்லி, மணல் போன்ற கனிம வளங்கள் கடத்தல் அதிகரித்து பல்வேறு சட்டவிரோதம் நடைபெற்று வருகிறது. தமிழகம் ஊழல் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.



விலைவாசி ஏற்றம், மின் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் மௌன புரட்சியாக பாராளுமன்ற தேர்தல் முடிவில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். மேலும் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. எப்படி கடிகாரம் ஏற்றுமதியில் சுவிட்சர்லாந்து முதன்மை நாடாக உள்ளதோ, அதேபோல தமிழகம் உலகம் முழுவதற்கும் போதைப்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...