கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையின் தெருவிளக்குகள் எரியாமல் பொதுமக்கள் அவதி

நேற்று மாலை கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் தெருவிளக்குகள் எரியாமல் போனதால், பெண்கள் உள்பட பொதுமக்கள் அவதி.


Coimbatore:

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றளவு கொண்ட இந்த நடைபாதை மாநகராட்சியால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டது. இந்த நடைபாதையை இரு புறங்களிலும் புதிய எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்களை கவரும் வகையில் மீடியா ட்ரீ, இருக்கைகள், இலவச வைஃபை வசதி என பல்வேறு வசதிகள் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் நேற்று ஏப்ரல்.26 மாலை நடைபாதையில் இருபுறங்களிலும் உள்ள தெருவிளக்குகள் பல இடங்களில் எரியவில்லை.

மேலும் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட இந்த நடைபாதையில் அவ்வப்போது எல்இடி தெரு விளக்குகள் எரியாமல் இருப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...