கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி - உடுமலை அருகே தமிழக கேரளா எல்லையில் வாகன சோதனையில் கால்நடைத்துறை அலட்சியம்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி உள்ளநிலையில் உடுமலை அருகே தமிழக எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனை சுவாடி பகுதியில் தற்சமயம் கால்நடை துறையினர் சோதனை செய்யாமல் அலட்சியமாக இருப்பதா பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஒன்பதாவது சோதனை சுவாடி வழியாக மூணாறு உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த நிலையில் தற்சமயம் கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோழி பண்ணைகளில் அதிக அளவு வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இறந்த வாத்துக்களை ஆய்வு செய்த போது பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பறவை பண்ணைகளில் பராமரிக்கப்பட்ட வாத்து, கோழிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. இதற்கிடையில் கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக கேரளாவை ஒட்டி உள்ள தமிழக கேரளா எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது.



இந்த நிலையில் தமிழக கேரள எல்லையான தென்காசி, களியக்காவிளை, ஆனைகட்டி, வாளையார் உடுமலை உட்பட 12 சோதனை சுவாடிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டன. இதற்கிடையில் பல இடங்களில் உள்ள தமிழக கேரளா பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் உடுமலை அருகே தமிழக எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனை சுவாடி பகுதியில் தற்சமயம் கால்நடை துறையினர் சோதனை செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். எனவே கேரளாவில் இருந்து வரும் வாத்து, கோழி, முட்டை, கோழி தீவனங்களுடன் வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப வேண்டும். மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக வாகனங்களுக்கும் கிருமி நாஷினி தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...